கருங்கடல் பகுதியில் கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் குற்றச்சாட்டு!
கருங்கடல் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் இன்று (24.02) அறிவித்துள்ளது.
இருப்பினும் ரஷ்ய படையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
2014 இல் மாஸ்கோ இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள அலுப்கா நகருக்கு அருகில் சீசர் குனிகோவ் என்ற கப்பல் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய இராணுவம் இந்த கூற்று குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, கருங்கடலில் ஆறு உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் வீழ்த்தியது என்று மட்டுமே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)





