ஆப்பிரிக்கா செய்தி

கென்யாவில் உகாண்டா தடகள வீரர் கத்தியால் குத்தி கொலை

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் உகாண்டாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெஞ்சமின் கிப்லாகாட், கென்யாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கத்தியால் குத்தப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

34 வயதான கிப்லாகாட், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக அறியப்படும் கென்யாவின் எல்டோரெட் நகருக்கு அருகில், அவரது மார்பு மற்றும் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காரில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கென்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிப்லகட்டின் மரணச் செய்தியால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக உலக தடகளப் பிரிவு தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!