செய்தி விளையாட்டு

IPL தொடரில் இருந்து விலகிய வீரருக்கு இரண்டு வருட தடை

ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசன் வருகிற 22ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில். அவரது பதிவில், “வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம். ஆகவே வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புகிறேன். இதற்கு எனக்கு நேரம் தேவைபடுகிறது. என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.

ஹாரி புரூக்கின் இந்த முடிவால் அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் புதிய விதிப்படி, ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு வீரர் காயத்தை தவிர பிற காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினால் அடுத்த 2 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content