இலங்கை

கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேகநபர்கள் இருவர் கைது

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகல்ஹின்ன பகுதியில் லொரி ஒன்றில் கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று அதிகாலை (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தானை பரங்கியாவாடி பகுதியில் இருந்து காலி மாவட்டத்திற்கு லொறியில் கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த வாகனத்தை சோதனையிட்டபோது கோழியின் மல மச்சங்களுக்கு கீழால் மறைத்து கருங்காலி குற்றிகளை கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கஹடகஸ்தஇகஇலஇய- மஹாகுபுக்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சாரதியும் 49 வயதுடைய உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கெப்பித்திகொள்ளால நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content