எரியும் எண்ணெய் கிடங்கின் முன் வீடியோ எடுத்த இரு ரஷ்ய டிக்டோக் பெண்கள் கைது

உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சோச்சியில் எரியும் எண்ணெய் கிடங்கின் முன் ராப் செய்யும் வீடியோவை வெளியிட்டதற்காக இரண்டு ரஷ்ய டிக்டோக் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 வயதான தாஷா விளாடிமிரோவ்னா லோஸ்குடோவா மற்றும் 19 வயதான கரினா எவ்ஜெனியேவ்னா ஓஷுர்கோவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் சேர்ந்து, ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் எரியும் எண்ணெய் கிடங்கின் அருகே தங்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த கிடங்கு ரஷ்ய இராணுவத்திற்கு எரிபொருள் வழங்கும் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெஃப்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோவில், மூவரும் நிதானமாக, ஒரு ரஷ்ய ராப் பாடலை பாடுவதையும் , அவர்களுக்குப் பின்னால் கருப்பு புகை மூட்டங்கள் எழுவதும் தெரிகிறது.
இந்த வீடியோ உணர்ச்சியற்றது மற்றும் பொருத்தமற்றது என்று ரஷ்ய அதிகாரிகள் விமர்சித்தனர்.