இலங்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் மற்றும் யுவதி இருவரும் கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இன்று (09.11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரும் 19 வயது யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் துபாய் செல்வதற்காக இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில்,  பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்கேகமடைந்த அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாம் தரகர் ஒருவரால் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், செல்லும் இடம் குறித்து தெரியாது என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!