ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

மெல்போர்னின் டோன்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தின் போது வீட்டினுள் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

(Visited 77 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!