இலங்கை

பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல்! நால்வர் கைது

தொழிலதிபர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் தங்க மோதிரத்தை கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தொழிலதிபர் வீடு திரும்ப பேருந்துகள் கிடைக்காததால் கடுவெலவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்.

இதன்போது குறித்த நான்கு சந்தேகநபர்களும் அறையின் உரிமையாளருடன் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதன்போது 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தொழிலதிபர் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டி, அவரைத் தாக்கி பொலுட்களை கொள்ளையடித்ததாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காலியின் நாகொட மற்றும் இமதுவ பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்ற இரண்டு சந்தேக நபர்களும் பிலியந்தலை மற்றும் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!