இலங்கை

இலங்கையில் விஷ வாயு கசிவால் இருவர் பலி: பின்னணியில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மாலம்பே, கஹந்தோட்ட வீதியில் உள்ள வீடொன்றில் விஷ வாயுவை சுவாசித்த இருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வீட்டிலிருந்த இரசாயனத்தைப் பயன்படுத்தி ஐஸ் ரக போதைப்பொருளைத் தயாரிக்க முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

எவ்வாறாயினும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குறித்த வீட்டின் இரசாயனங்கள் இருந்த அறைக்குள் வந்து சோதனையிட்டதன் பின்னர், அந்த இரசாயனங்கள் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுபவை என அடையாளம் கண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!