திருகோணமலை பன்குளம் பகுதியில் வாகன விபத்தில் இருவர் படுகாயம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/p1-1280x700.webp)
திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் ஏ12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நேற்றிரவு (17) திருகோணமலை கும்புறுப்பிட்டியில் வைத்து வீதியால் பயணித்த ஒருவர் டிமோ பட்டா வாகனத்தினால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியிருந்தார். இந்நிலையில் குறித்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த நபர் திருகோணமலை கும்புறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ். பொற்செல்வன் (47) என தெரிய வருகின்றது.