விக்டோரியாவில் ஏடிஎம் கொள்ளை ; இருவர் கைது
விக்டோரியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் முதல் ஒன்பது இடங்களில் திருடப்பட்ட இழுவை லொரிகளை (Tow Trucks) பயன்படுத்தி, வணிக நிறுவனங்களின் சுவர்களை உடைத்து இவர்கள் ஏடிஎம்களை திருடியுள்ளனர்.
இதில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஃபேர்ஃபீல்ட் (Fairfield) மற்றும் பென்ட்லீ ஈஸ்ட் (Bentleigh East) உள்ளிட்ட பகுதிகளில் நான்கு ஏடிஎம்கள் திருடப்பட்ட நிலையில், இது தொடர்பாக 34 மற்றும் 31 வயதுடைய இருவர் மீது 11-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருடப்பட்ட 7 லாரிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் பல கைது நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





