இலங்கை

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணிடம் கைவரிசையை காட்டிய பொலிஸார்

வெளிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் சார்ஜென்ட் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவத்துள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த ஒஸ்ட்ரிய நாட்டு பெண்ணிடம் ரூ. 50,000 இலஞ்சமாக பெற முயற்சித்த வேளையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குறித்த வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இவர்கள் இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!