இலங்கை

தங்கம் கடத்தல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது!

இலங்கைக்கு தங்கப் பொருட்களை கடத்த முயன்ற இருவர் இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்மாந்துறையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், கல்முனையைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 14 வளையல்கள், மூன்று சங்கிலிகள், மூன்று மோதிரங்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்