இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றுகையில் இனப்படுகொலை குறித்து கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார்.
அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உலகிற்கு அதிக ட்ரம்ப்கள் தேவை என்று எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.
ட்ரம்ப் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் ட்ரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.
ஐமென் ஓடே(Aymen Ode)மற்றும் ஓஃபர் காசிஃப்( Ofer Kassif) ஆகிய இரண்டு உறுப்பினர்களே இவ்வாறு கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிப் பிடித்திருந்தார்.





