உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சி – புட்டினிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை

உக்ரைனில் நீடித்துவரும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் வலியுறுத்த உள்ளதாக அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பெரும் பதற்றத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் இருநாட்டு பிரதிநிதிகளுடன் தொலைபேசி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் மூலம் அந்த முரண்பாட்டை சமாளித்ததைக் குறிப்பிட்ட அவர், தற்போது உக்ரைன் போருக்கும் அதே நிலைபாடு அமையும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இதனுடன், போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்காவின் உறவுகள் வழக்கம்போல சகஜமாகவும், நட்புடன் தொடர்வதாகவும் புரூஸ் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)