இலங்கை

திருகோணமலை- காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வெல்கம் விகாரை பகுதியிலுள்ள காணிகளை அபகரித்து அங்குள்ள காட்டு மரங்களை வெட்டி வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியை பொதுமக்கள் சுற்றி வளைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

வெல்கம் விகாரை வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு 65 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி கையகப்படுத்தப்படுவதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த இடத்துக்கு விரைந்து அங்கு வேலி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பல வருட காலங்களாக அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு இன்னமும் காணித் துண்டுகள் அரசினால் வழங்கப்படாத நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற செல்வந்தர்களுக்கு வனப்பகுதிகள், காணிப்பகுதிகள் என்பன தாரைவாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தம்மால் பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதற்கு அரச அதிகாரிகளும் அப் பகுதியில் உள்ள விகாரையின் விகாராதிபதியும் உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டினர்.குறித்த வனப்பகுதியில் தமது தேவைக்காக விறகு வெட்டச் சென்ற போது பலதடவைகளில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது பாரிய மரங்களை வெட்டி வேலி அமைப்பதற்கு எவ்வாறு இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குறித்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content