இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

Voice of Srilanka அமைப்பினால் கிழக்கு மக்களின் குரல் ஊடாக 100 கண் சத்திரசிகிச்சை வில்லைகள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.

சுகாதார நெருக்கடி காரணமாக சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டு இருக்கும் அபாயம் காணப்பட்டுக் கொண்டிருந்தது. அதுபோன்று பல்வேறு தரப்பட்ட சிகிச்சைகளின் எண்ணிக்கைகள் குறைந்திருந்தது.

இந்நிலையில் மக்களின் நலனுக்காக இந்த வில்லைகள் இத்தாலி நாட்டில் வசித்து வரும் எமது இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் கண் வைத்திய நிபுணர் மங்கள திஸாநாயக்கவிடம் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருன் ஹேமச்சந்திரன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இத்தாலி நாட்டின் Voice of Srilankaவின் பிரதிநிதி ரங்கும்புர கெதர நிலூ என்பவரும் கலந்து கொண்டார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content