இலங்கை

திருகோணமலையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான முச்சக்ரவண்டி – இளம் குடும்பஸ்தர் பலி!

திருகோணமலை- வெருகல் – பூநகர் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச்சம்பவம் இன்றையதினம் (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஒன்றை ஏற்றிச் சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா ஜெயச்சந்திரன் ( 41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
See also  இலங்கை: எட்டு மாதங்களில் 239 யானைகள் பலி! வெளியான தகவல்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content