ஆசியா

மலேஷியாவில் சோகம் – ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தின் 10 பேர் – 7 சடலங்கள் மீட்பு

மலேஷியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரில்ல் 7 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆறு ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தெரெரங்கானு மாநிலத்தின் சுகாய் மாவட்டத்தில் காட்டுப்பகுதியிலுள்ள ஜேராம் மாவார் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றுநீர் அளவு அதிகரித்ததால், இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என நான் எண்ணுகிறேன். நீர்மட்டம் 3 மீற்றர் அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளது” என பொலிஸ் அதிகார ஹன்யன் ரம்லான் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 40 வயதானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இக்குடும்பத்தினர் நீராடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் 7 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏனைய மூவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன எனவும் பொலிஸ் அதிகாரி ஹன்யன் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!