யாழில் முதியவரொருவருக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று (18.11) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உணவகம் ஒன்றில் பணியாற்றும் சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று (19.11) பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)