தமிழ்நாடு

விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விபரீதம் – பிரபல யூடியூபர் கைது

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது.

இந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கூறி யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அவரது யூடியூப் சேனலில், விஜய் கைது, மின்சார தடை சதி உள்ளிட்ட வதந்திகளை பரப்பியதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. பெலிக்ஸ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கப்படுகிறார்.

இதற்கு முன், இதே காரணத்திற்காக சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவநேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜே.கே., “வதந்திகள் பொதுமக்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்தார்.

இந்த வதந்திகள், சமூக அமைதியை குலைத்து, மக்களிடையே அச்சத்தை விதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில், தவெக கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டார்.

SR

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!