இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இரண்டு சகோதரிகள் உட்பட மூவர் கைது
அளுத்கமவிலிருந்து(Aluthgama) பதுளை(Badulla) மற்றும் பண்டாரவளைக்கு(Bandarawela) போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று நபர்கள், ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுடன், விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 1,000 ஹெராயின் பொதிகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஹாலி-எலயில்(Hali-ela) வசிக்கும் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சகோதரிகள் பதுளை மற்றும் பண்டாரவளையில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
மேலும், இவர்களுடன் இணைந்து போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)





