அஹுங்கல்ல நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்
அஹுங்கல்ல உரகஹா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் மீது முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





