அரசியல் இலங்கை செய்தி

புலிகளை ஒழிப்பதற்கான போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல – நாமல்!

“நாம் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போர் இடம்பெற்றது. எனவே, புலிகள் அமைப்பை தோற்கடித்தமை இனவாதம் கிடையாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.

” படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்தது தொடர்பில் சுதந்திர தின நிகழ்வில் பெருமையாகக் கூறப்படவில்லை. அதைவிடுத்து டித்வா புயல் பற்றியே வர்ணனை வழங்கப்பட்டது.

சில நாடுகளில் முதலாம் உலகம்போரில் கிடைத்த வெற்றி தொடர்பில்கூட இன்றளவிலும் பேசப்படுகின்றது.” -எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

எனவே, குறைந்த பட்சம் போர் காலத்தில் எமது நாட்டில் ஒவ்வொரு படைப்பிரிவும் வழங்கிய பங்களிப்பு பற்றியாவது கதைத்திருக்கலாம்.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது இனவாதமாக அரசு கருதுகின்றது போலும். இது இனவாதம் அல்ல. நாம் தமிழ் மக்களுக்கு எதிராக போர் செய்யவில்லை.

ஒருபோதும் அழிக்க முடியாது எனக் கூறப்பட்ட பயங்கரவாத அமைப்பையே எமது படையினர் தோற்கடித்தனர். இதனை கூறுவதற்கு அரச தலைவருக்கு முதுகெலும்பில்லை.”- என நாமல் மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!