நவ லிபரல் கொள்கையை கைவிடுமாறு ஐ.தே.கவுக்கு மொட்டு கட்சி ஆலோசனை!
“நவ லிபரல் கொள்கையை Neoliberalism ஐக்கிய தேசியக் கட்சி UNP கைவிட்டால் தமது கட்சியுடன் இணைந்து பயணிக்கலாம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தேசியத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாகும்.
ஒற்றையாட்சி உட்பட தேசியத்துவத்தை முன்னிலைப்படுத்தியே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
எனவே, எமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான இடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன.
நவ லிபரல் கொள்கையை அக்கட்சி கைவிட்டால் மாத்திரமே தமது கூட்டணியுடன் இணைந்து பயணிக்கலாம். அவ்வாறு அல்லாவிட்டால் இணைவு சாத்தியமில்லை எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.





