கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மற்றொரு தாக்குதலை நடத்திய அமெரிக்கா!
அமெரிக்க இராணுவம் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நேற்று மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் கீழ் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருப் பகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்பட்டமைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க இராணுவம் முன்வைக்கவில்லை.
இதேவேளை குறித்த கடற்பகுதியில் இதுவரை 26 தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான தாக்குதல்களை மனித உரிமை கண்காணிப்பாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





