இலங்கை

ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவரின் மகளின் கண்ணீர் பதிவு!

கேகாலை பொது வைத்தியசாலையில் நுண்ணுயிர் எதிர்ப்பியை உட்கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார்.

அஜித் விஜேசிங்க 57 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் மகள் கூறுகையில், “அப்பாவின் வாயில் இரண்டு பக்கமும் காயம். அதனாலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். கல்லீரல் 60% பாதிக்கப்பட்டிருந்தாலும் நலமாக வாழலாம் என்று வைத்தியர் சொன்னார்.

17ம் திகதி காலை அப்பாவை பார்க்க சென்றேன். இன்னும் நலமாக இருந்தார். 8 மணிக்கு ஊசி போட்டார்கள். “மருந்து முடிந்து நடந்ததை அருகில் இருந்தவர்களிடம் அப்பா கூறியிருக்கிறார். அடுத்த நாள் இறந்துவிட்டார். அவர் தீவிர நோயால் வைத்தியசாலைக்கு வரவில்லை.”எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட அதே Ceftriaxone மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தமையினால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!