இந்தியா

இந்தியாவில் 20 மாதக் குழந்தைக்கு தாய் செய்த அதிர்ச்சியளிக்கும் செயல்!

அசாமில் தனது 20 மாதக் குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் தாயே வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படங்கள் வைரலானதைக் கண்ட சைல்டு லைன் அதிகாரிகள், பொலிஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் அந்த குடியிருப்பை பொலிஸார் சோதனை செய்து குழந்தையை மீட்டனர். அத்துடன் அக்குழந்தையின் தாயை விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.

தாயும், குழந்தையும் தற்போது குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், விரிவான விசாரணைக்காக ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அந்தக் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளனர்.

(Visited 35 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே