செய்தி

ஆஸ்திரேலிய வீதிகளில் உயர் தொழில்நுட்ப வாகனங்களின் அதிகரிப்பு

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் சாலைகளில் உயர் தொழில்நுட்ப வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதிக தகவல் தொடர்பு திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல், உயிர் ஆபத்து போன்றவற்றை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய 09 மாதங்களாக நடத்தப்பட்ட பரிசோதனையின் பலனாக இவ்வகையான 355 வாகனங்கள் இயக்கப்பட்டு உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிநவீன தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் வீதியில் பயணிக்கும் பாதசாரிகள் பற்றிய சரியான தகவல்களுடன் வீதிப் பலகைகள், போக்குவரத்துச் சின்னங்கள் போன்றவற்றை அடையாளம் காணக்கூடியதாக இருப்பது ஒரு சிறப்பு.

புதிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கு சோதனை ஓட்டுநர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்ததாக விபத்து மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும் முழுமையான தன்னாட்சி வாகனங்களுக்கு ஆஸ்திரேலியா இன்னும் தயாராகவில்லை எனினும் அதிக தகவல் தொடர்பு திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வாகனங்களை சாரதிகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி