Site icon Tamil News

ஆஸ்திரேலிய வீதிகளில் உயர் தொழில்நுட்ப வாகனங்களின் அதிகரிப்பு

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் சாலைகளில் உயர் தொழில்நுட்ப வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதிக தகவல் தொடர்பு திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல், உயிர் ஆபத்து போன்றவற்றை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய 09 மாதங்களாக நடத்தப்பட்ட பரிசோதனையின் பலனாக இவ்வகையான 355 வாகனங்கள் இயக்கப்பட்டு உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிநவீன தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் வீதியில் பயணிக்கும் பாதசாரிகள் பற்றிய சரியான தகவல்களுடன் வீதிப் பலகைகள், போக்குவரத்துச் சின்னங்கள் போன்றவற்றை அடையாளம் காணக்கூடியதாக இருப்பது ஒரு சிறப்பு.

புதிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கு சோதனை ஓட்டுநர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்ததாக விபத்து மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும் முழுமையான தன்னாட்சி வாகனங்களுக்கு ஆஸ்திரேலியா இன்னும் தயாராகவில்லை எனினும் அதிக தகவல் தொடர்பு திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வாகனங்களை சாரதிகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version