இலங்கை செய்தி

இலங்கையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்வு

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகமாக காணப்படும் சூழலில், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த பருவ மழையால் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கரில் சராசரியாக 5,000 கிலோ வெங்காய மகசூல் கிடைக்கும் என்றாலும், இம்முறை ஒரு ஏக்கரில் இருந்து 1,000 கிலோ மட்டுமே கிடைத்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இம்மாத இறுதி வரை சதொச ஊடாக 1 கிலோ வெங்காயம் 400 ரூபாவிற்கு வழங்கப்படும் என இலங்கை சதொச தலைவர் பசட யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையை வர்த்தக அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!