இலங்கையில் பால் தேநீரின் விலை இன்று முதல் அதிகரிப்பு!
இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதென அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 50 times, 1 visits today)





