இலங்கை

சுவிஸ் தூதுவரை சந்திப்பதற்காக சென்றவர்களை முறையற்ற விதத்தில் சோதனையிட்ட பொலிஸார்!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆனைக்குழு தொடர்பான கலந்துரையாடலுக்கு பயணித்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தியதுடன், உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களான கண்டுமணி லவகுசராஷா, அழகுராசா மதன் ஆகியோர் பயணித்த வாகனமே நேற்றிரவு 10:30 மணியளவில் ஹபரன -கல்ஓயா சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இச்சோதனையின் போது எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டபோது சுவிஸ் தூதுவரை சந்திப்பதற்காக கொழும்புக்கு கூட்டம் ஒன்றிற்கு செல்வதாக கூறியதன் பிற்பாடு முறையற்ற விதத்தில் உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன், பணப்பை கைப்பற்றப்பட்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்ட பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பொலிஸார் எம்மை அச்சுறுத்தும் நோக்குடன் செயல்பட்டதாக நாம் உணர்கின்றோம் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை கடந்த 2023/07/18ம் திகதி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராஷா திருகோணமலையில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு மூன்று மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாட்டில் தற்போது சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மொரவெவ சிவில் சமூக அமைப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content