உலகம்

700 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

அடுத்த வேளை உணவு கிடைக்குமா? மறுபடியும் சாப்பிடுவோமா? என தெரியாத அச்ச நிலையில் உலகில் உள்ள 700 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாட்டு உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.

உணவுக்கான தேவை அதிகரிக்கிறது. ஆனால் மனிதாபிமான உதவிக்கான நிதி குறைவதாக அமைப்பு சொன்னது.

நிதிப் பற்றாக்குறையால் பல மில்லியன் மக்களுக்கான உணவைக் குறைக்க வேண்டியுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கூறினார்.

இதுவே புதிய வழக்கநிலை என்று அவர் குறிப்பிட்டார். 50க்கும் அதிகமான நாடுகளில் கிட்டத்தட்ட 47 மில்லியன் பேர் பஞ்சத்தால் அவதியுறும் நிலையில் உள்ளனர்.

5 வயதுக்கு உட்பட்ட 45 மில்லியன் பிள்ளைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டை, பொருளியல் நெருக்கடி, பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் உர விலைகள் ஆகியவை அதற்குக் காரணமாகும்.

COVID-19 நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பாலும் உக்ரேன் போராலும் உணவு விலைகள் பாரிய அளவில் உயர்ந்துள்ளன.

(Visited 53 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்