அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் கழன்று விழுந்த விமானத்தின் டயர்..!

அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ‘டெல்டா’ விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 757 ரக விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 184 பயணிகளும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு கட்டுப்பாட்டு அறை சிக்னலுக்காக விமானிகள் காத்திருந்தனர். அப்போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்ததனால் அந்த விமானம் அதிர்ந்தது.
இந்நிலையிஒ விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ,விமானத்தில் இருந்த பயணிகளை விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்டதாகவு கூறப்படுகின்றது
(Visited 11 times, 1 visits today)