இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி – வாரத்திற்கு 2 வேலைநாட்கள் – பில் கேட்ஸ் அறிவிப்பு

இன்னும் பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் 2 வேலை நாட்கள் மட்டுமே என்கிற நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும். இதனாலேயே வேலைநாள்களும் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல துறைகளிலும் AI தொழில்நுட்பம் கோலோச்ச தொடங்கிவிட்டது. இப்போதைய ட்ரெண்டிங்காக இணையத்தில் கலக்கி வரும், ‘ஜிப்லி’ வகை கார்ட்டூன் சித்திர படங்களும் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் விளைவே.

இப்படியே போனால்… தொழில்நுட்பத்தை நம்பியே சுழலும் இந்த நவீன யுகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்பதையே பிரதிபலிக்கிறது பில் கேட்ஸின் கருத்து.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!