இந்தியா

விமான ஆசனத்தில் சிறுநீர் கழித்த பயணி கைது!

இந்திய விமானமொன்றில் பயணிகளுக்கான ஆசனங்கள் மீது சிறுநீர், மலம் கழித்த குற்றச்சாட்டில் பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி மும்பையிலிருந்து டெல்லிக்கு பறந்துகொண்டிருந்த எயார் இந்தியா விமானம் ஒன்றில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிளைட் ஏஐ 866 எனும் இவ்விமானத்தின் 9 ஆவது வரிசை ஆசனங்கள் மீது சிறுநீர் கழித்தார் என எயார் இந்தியா நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, விமான ஊழியர்களால் குறித்த  பயணி தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார் எனவும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இவ்விமானம் தரையிறங்கிய பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர் அந்நபர் உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!