இலங்கை

அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்ததுள்ள உத்தரவு

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 20 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 25ம் திகதி புதன்கிழமை குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்து தமிழர்களை மிக வேதனைபடும் அளவிற்கு துஷனவார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளது என தேரர் இவ்வாறான இன முரன்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த தேரரின் செயற்பாட்டை கண்டித்தது அவருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27) ம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து இது தொடர்பாக பொலிசார் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தொடர் விசாரணையின் பின்னர் தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்த மோகனை பிரதிவாதியாக குறிப்பிட்டு தேரருக்கு எதிராக இன்று வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் வழக்கை விசரணைக்கு எடுத்தக் கொண்டு தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவியை இறவெட்டுக்களில் பதிவு செய்து 20 ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கை விசாரணைக்காக ஒத்திவைத்துள்ளார்.

 

 

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்