அடுத்த 15 ஆண்டுகளுக்கு NPP அரசை அசைக்க முடியாது!
“ தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தை அடுத்த 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.”- என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமில்லை. நாம் மக்கள் மத்தியில் உண்மையைக் கூறி செயல்பட்டுவருகின்றோம்.எனவே, எமது ஆட்சி தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள்.
நவீன உலகை வெல்ல வேண்டுமெனில் கல்வி மறுசீரமைப்பு அவசியம். அதனை செய்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
எனினும், கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு பிழையை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மறுசீரமைப்பையும் குழப்புவதற்கு முற்படுகின்றனர்.
இது எமது நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.”- என்றார் ராமலிங்கம் சந்திரசேகர்.




