ஆஸ்திரேலியா

மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

பாலியில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென எழுந்த பயணி சப்தத்தை உயர்த்தி சபித்து மேலும் பல பயணிகளை தாக்க முயன்றதாக குவாண்டாஸ் விமான ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊழியர்களையும் மிரட்டும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், பணியாளர்களும் பயணிகளும் சேர்ந்து அவரைக் கட்டுப்படுத்தி விமானத்தின் நடுவில் பல மணி நேரம் தரையில் வைத்திருந்தனர்.

சந்தேக நபர் மெல்போர்ன் விமான நிலையத்தில் மத்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!