உலகம்

ஜாம்பியாவை மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்… 400-ஐ கடந்த இறப்புக்களின் எண்ணிக்கை

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் காலரா பாதிப்பால் தத்தளித்து வரும் நிலையில், இதுவரையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பாதிப்பால் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா பாதிப்பால் நாடு முழுவதும் பாடசாலைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானமொன்று மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜாம்பியா அரசாங்கமானது தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி சேவையை முன்னெடுத்து வருகிறது.

அத்துடன் நாளுக்கு 2.4 மில்லியன் சுத்தமான குடிநீரும் விநியோகிக்க உள்ளது. காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு பாதிப்பாகும், இது பொதுவாக அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது.ஜாம்பியாவில் காலரா பாதிப்பானது அக்டோபரில் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 412 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 10,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Cholera outbreak in Zambia caused more than 400 deaths | CTV News

நாட்டின் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களிலும், 10 மாகாணங்களில் ஒன்பது மாகாணங்களிலும் காலரா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

See also  உலக சந்தையில் சாதனை மட்டத்தை எட்டிய தங்கத்தின் விலை : தொடர்ந்து அதிகரிக்கும் சாத்தியம்!

சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு 400 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. மேலும், மலாவி, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட பிற தென்னாப்பிரிக்க நாடுகளிலும் சமீபத்தில் காலரா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தென்னாப்பிரிக்காவில் 200,000க்கும் மேற்பட்டவர்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content