தமிழ்நாடு

YouTube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்… பரிதாபமாக பலியான இளம்பெண்!

தமிழகத்தில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் பலருக்கு இயற்கை மீதான ஆர்வம் அதிகமாகி வருகிறது. கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். வேறு வழி இல்லாத காரணத்தினால் மட்டுமே செயற்கை மருத்துவத்தை நாடுகின்றனர்.அதுமட்டுமல்லாமல், அழகுக்குறிப்புகள் முதல் உடல்நிலை பிரச்சனை வரை யூடியூப் பார்த்து தான் அதற்கான தீர்வினை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், தற்போது சிலர் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கை முறையில் எப்படி பிரசவம் ஆக வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளை யூடியூபில் பார்க்கின்றனர்.

தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

loganayaki / லோகநாயகி

இவர்கள், இருவரும் இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள். மேலும், இவர்கள் இருவருமே வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இந்நிலையில், லோகநாயகி கர்ப்பமானதையடுத்து தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.இதனால், இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்று யூடியூபில் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், லோகநாயகிக்கு நேற்று காலை வலி வந்துள்ளது. அப்போது, பேசியபடியே யூடியூப் பார்த்து கணவர் மாதேஷ் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.பின்னர், லோகநாயகிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமானார். இதனையடுத்து, அவரை போச்சம்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகநாயகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாதேஷிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கை முறையில் பிரசவம் பார்த்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content