இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக ஏறக்குறைய 500 மில்லியன் ரூபாயை செலவழித்த அரசாங்கம்!
2017 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கான செலவுகளுக்காக மொத்தம் ரூ. 491.2 மில்லியன் (ரூ. 491,203,422) செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் விதவை மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் ஓய்வூதியம், வாகனங்கள் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகளை இந்த செலவு உள்ளடக்கியது.
அறிக்கையின்படி, ஹேமா பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2017 முதல், மைத்திரிபால சிறிசேன 2019 முதல், கோத்தபய ராஜபக்ஷ 2022 முதல், மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் 2024 முதல் சலுகைகளுக்கு உரிமை பெற்றுள்ளனர்.





