இலங்கை

கொழும்பில் கேட்டை தட்டியதற்காக அடைத்து வைக்கப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

கொழும்பு, கெசல்வத்த பகுதியிலுள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாடியில் இருந்து நேற்று பிற்பகல் குதித்து சிறுவன் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் படுகாயமடைந்த கொழும்பு-12 ஐச் சேர்ந்த 12 வயது சிறுவன் தற்போது லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த சிறுவன் தனது வீட்டிலிருந்து ஒரு கடைக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் வந்த போது மூன்று மாடி வீட்டின் இரும்புக் கேட்டைத் தட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வீட்டின் உரிமையார் சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்து சென்று இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அச்சமடைந்த சிறுவன் அறையில் ஒரு ஜன்னலைத் திறந்து கீழே குதித்து பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுவனை அடைத்து வைத்த 59 வயதான சந்தே நபர் தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!