ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றிய 76 வயது முதியவருக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் 2 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை கடத்த திட்டமிட்டதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை மெல்பேர்னில் இருந்து பேர்த் விமான நிலையத்திற்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் 76 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரை சோதனையிட்ட பிறகு, அவர் ஒரு பையுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டார்.

மற்றுமொரு நபருடன் டேட்டனில் உள்ள வீடொன்றுக்கு காரில் சென்ற இருவரையும் பின்தொடர்ந்த அதிகாரிகள் சோதனையின் போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபரின் பையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக மேற்கு அவுஸ்திரேலியா பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வீட்டைச் சோதனையிட்டதில் 50,000 டாலர் ரொக்கம் கிடைத்தது மற்றும் காரில் இருந்த 55 வயதுடைய நபரும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

76 வயதான பிரதான சந்தேகநபர் மீது ஐஸ் போதைப்பொருளை விற்பதற்கு அல்லது கடத்தும் நோக்கில் எடுத்துச் சென்று வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பெர்த் நீதவான் நீதிமன்றில் நவம்பர் 7ஆம் திகதியும் மற்றையவர் டிசம்பர் 5ஆம் திகதியும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!