செய்தி

ஈரான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஈரான் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

ஜெனரல் காசிம் சுலைமானியின் நான்காவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற கல்லறைக்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளதுடன், 188 பேர் காயமடைந்துள்ளனர்.

காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு முதலில் வெடித்ததாகவும், பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றைய வெடிகுண்டு வெடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் புரட்சிகரக் காவலர் ஜெனரல் காசிம் சுலைமானி 04 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி