இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு!

கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி தினேஷ் ஷாஃப்டரின் மகிழுந்தில் காணப்பட்ட பிறிதொரு நபரின் இரத்த மாதிரியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்