இலங்கை

யாழில் கோர விபத்தில் சிக்கிய தம்பதியினர்! கணவன் பலி

யாழ்ப்பாணம் – நல்லூர், செம்மணி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

உந்துருளி ஒன்றும், தண்ணீர் தாங்கி ஊர்தி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், உந்துருளியில் பயணித்த கொக்குவில் கிழக்கை சேர்ந்த 31 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் கிழக்கை சேர்ந்த புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த 26 வயதான அவருடைய மனைவி இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content