இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை தயாரித்துள்ள மின் கட்டண யோசனைத் திட்டம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களையும் மின் கட்டணத் திருத்த யோசனைகளை முன்வைக்க வேண்டிய வழிமுறைகளையும் கருத்திற் கொண்டு வருடாந்தம் இரண்டு தடவைகள் மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதியும் ஜூன் மாதம் முதலாம் திகதியும் இந்த மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

உண்மையான மின் உற்பத்தித் தரவுகளையும், விற்பனை சார் தரவுகளையும், எரிபொருள், நிலக்கரி மற்றும் ஏனைய மூலப் பொருட்களின் விலைகளையும்,
இந்த வருட மின் உற்பத்தித் திட்டங்களையும், மின்சாரத் தேவையையும் கருத்திற் கொண்டு மின்சார சபை இந்த யோசனைத் திட்டத்தை தயாரித்துள்ளது.

மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உயர்ந்தபட்சப் பயனைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த யோசனைத் தயாரிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!