செய்தி

இலங்கையில் 07 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சிறுமியின் உறவினர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பள்ளம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

77 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆனமடுவ, அதிகம மற்றும் பரப்பந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் சிறுமியின் தாத்தா எனவும், மற்றைய சந்தேக நபர் சிறுமியின் தாயின் சகோதரியின் பிள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி ஒருவர் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் தனக்கு 05 வயது முதல் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!