பொழுதுபோக்கு

தலைவர் 170-ல் ரஜினிக்கு வேற வில்லனே கிடைக்கலயா? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கிறார். அதில், தசெ ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

அதேபோல், ரஜினிக்கு வில்லனாக டோலிவுட் முன்னணி ஹீரோ நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கிய ஜெயிலர், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என இரண்டு படங்களை முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதில் நெல்சனின் ஜெயிலர் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் ரஜினிக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரம் அல்லது அர்ஜுன் நடிக்கலாம் என சொல்லப்பட்டது.

முக்கியமாக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா தரப்பு ரெடியாக இருந்தது.

ஆனாலும் விக்ரம் மறுத்துவிட்டதால், அடுத்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அவரும் இந்த ஆஃபருக்கு நோ சொல்லிவிட்டாராம். இதனால் தற்போது தெலுங்கு நடிகர் நானி, தலைவர் 170ல் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானி தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு கெத்தான நடிகர் கிடையாது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனிடையே தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

(Visited 11 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்